சமூக வலைதளமான பேஸ்புக் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் தேடல் பொறி செயலியால், அத்துறையில் முன்னணியில் உள்ள கூகுள் நிறுவனம் அச்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இணையத்தில் நாம் எதாவது ஒன்றை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் தேடல் பொறி செயலியின் உதவி தேவை.

அந்த வகையில் முன்னணியில் இருந்த யாகூ (yahoo) தேடு தளத்தை பின்னனுக்கு தள்ளி கூகுள் முதல் இடத்தை பிடித்தது.

இந்நிலையில் பேஸ்புக் புதிய தேடுதல் வசதியை தனது பயனாளர்களுக்கு வழங்குவதால் கூகுள் அச்சம் அடைந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த சிலரின் பேஸ்புக் பக்கத்தில், அட்-லிங் எனும் புதிய வசதியை பேஸ்புக் நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்த புதிய வசதி மூலம் நீங்கள் விரும்பிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

அது தொடர்பான இணைதள லிங்குகளும் கிடைக்கும். மேலும் அந்த தகவல்களை நேரடியாக பேஸ்புக்கில் ஸெட்டசாக பகிர்ந்துகொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்த துறையில் முன்னணியில் உள்ள கூகுள் நிறுவனம் அச்சத்தில் உள்ளது. மேலும் பேஸ்புக்கின் இந்த புதிய தேடுதல் வசதி உலகம் முழுவதும் பயன்பாட்டிற்கு வந்தால் கூகுலின் விளம்பர வருவாய் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.







0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top